திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு பசி எனும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் முதல் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை (மதிய) உணவு வழங்கப்பட்டது, அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இதே போன்று மதிய உணவு விஜய் மக்கள் இயக்க தொண்டரணி சார்பில் வழங்கப்பட்டது,

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொளசூர், முருக்கேரி, மரக்காணம், எக்கியார் குப்பம், பந்தாடு, கீழ் அறுங்குணம் ஆகிய கிராமங்களில் மதிய உணவு வழங்கப்பட்டது இதில் 500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் பசியாறினர், இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் மக்கள் இயக்க மரக்காணம் ஒன்றிய தொண்டரணி தலைவர் தினேஷ் குமார் உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு உணவுகளை வழங்கினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *