எஸ்.செல்வகுமார். செய்தியாளர்
மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பட்டினம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 11ஆம் தேதி மாயமாகியுள்ளார்.
இது குறித்து மாணவியின் தாயார் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் மாணவியை பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில்
இளைஞர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி சீர்காழியில் கடத்தி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் மேற்கொண்ட விசாரனையில் திருநெல்வேலி மாவட்டம் வானரபட்டி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் சதீஷ்குமார் (24) என்ற இளைஞர் ஸ்னாப் ஷாட் கேமரா மூலம் பழகி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.
இதனை அடுத்து சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மீட்கப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டடார்.