வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் கோயிலில் திருவிழா காலத்தில் வைக்கப்பட்ட 7தற்காலிக
உண்டியல்கள் திறப்பு நடைபெற்றது. இந்த உண்டியல்கள் மூலம் ரூ 7.74லட்சம் ரொக்கமும், பொன் இனங்கள் 27கிராமும், வெள்ளி இனங்கள் 172கிராமும் பக்தர்களால் காணிக்கை யாக கிடைக்கப்பெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா
மாரியம்மன் சக்தி தலங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் பங்குனி மாதம் பாடைக்காவடி திருவிழா பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் நிரந்தர உண்டியல்கள் 6,பஸ் குலுக்கல் உண்டியல்கள் உள்ளது. திருவிழா காலத்தில் தற்காலிக உண்டியல்கள் அமைப்பது வழக்கம். அதேபோல் இந்தாண்டு பங்குனி பாடைக்காவடி திருவிழா கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி நடைபெற்றது. அப்போது வைக்கப்பட்ட 7தற்காலிக உண்டியல்கள் திறந்து எண்ணிக்கை பணி இந்து சமய அறநிலையத்துறை திருவாரூர் உதவி ஆணையர் மணவழகன்
முன்னிலையில் ஆலய செயல் அலுவலர் ஆ. ரமேஷ், ஆய்வர்/ தக்கார்
தமிழ்மணி ஆகியோர் மேற்பார்வையில் எண்ணப்பட்டது. எண்ணிக்கை பணியில்
அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், திருவாரூர் மாவட்ட ஜயப்பாசேவா சமாஜ் சங்கத்தினர், மற்றும் தெரு வாசிகள் கலந்து கொண்டனர். 7தற்காலிக
உண்டியல்கள் மூலம் ரூ 7லட்சத்து 74ஆயிரத்து 178 ரொக்கமும், பொன் இனங்கள் 27கிராமும், வெள்ளி இனங்கள் 172
கிராமும் பக்தர்களால் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது. உண்டியல்கள் திறப்பு ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ஆ. ரமேஷ், ஆய்வர்/
தக்கார் தமிழ்மணி, அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *