டார்க்ஆப்எமர்ஜென்சி என்பது நமது வரலாற்றில் மறக்க முடியாத காலகட்டமாக உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். புதுடெல்லி, 1975-ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சியின் 48-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மூத்த கட்சி மற்றும் அமைச்சரவை சகாக்கள் பலர் இன்று “எமர்ஜென்சியின் கருப்பு நாட்களை” எதிர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்தநிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எமர்ஜென்சியை எதிர்த்து, நமது ஜனநாயக உணர்வை வலுப்படுத்த உழைத்த துணிச்சல் மிக்கவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். எமர்ஜென்சியின் கருப்பு நாட்கள் இந்திய வரலாற்றில் மறக்க முடியாத காலக்கட்டம் எனவும் ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்க எமர்ஜென்சியை எதிர்த்து போராடியவர்களுக்கு மரியாதை என பிரதமர் மோடி கூறியுள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *