தியாகத் திருநாள் எனப் போற்றப்படும் ஹஜ் பெருநாள் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தியாகத்தின் வெளிப்பாடு ஹஜ் பெருநாள். இறைவன் உலக படைப்புகளில் மனிதனையே உயர்ந்தவனாகவும், உயர்வானவனாகவும் சங்கைமிக்கவனாகவும் படைத்திருக்கிறான்
அவனது உயிர் மதிக்கத்தக்கதாகவும், உயர்வு மிக்கதாகவும் இருக்கிறது என்பதை உணர்த்தும் நாள் இந்த ஹஜ் பெருநாள்உலகோர் அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவர்கள் என்ற நபிகள் நாயகம் கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், ஏகத்துவம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவதே மனித இனத்தின் குளிக்கோளாகும்.
அதன்படி, ஏழை, எளியோரின் பசி தீர்த்துக் கொண்டாடும் தியாகத்தின் திருநாளாம் ஹஜ் பெருநாளில், “ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகள், பிற நண்பர்கள், அடுத்ததுதான் தங்களுக்கு என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து, பயன்படுத்திக்கொள்ளும் பண்பையும், மனித நேயத்தையும் இஸ்லாமிய பெருமக்கள் இந்த நாளில் வெளிப்படும்
அகில இந்திய சட்ட விழிப்புணர்வு இயக்கம் & அகில இந்திய சமூக விழிப்புணர்வு பேரவை மற்றும் பத்திரிகையாளர் சங்கத்தின் கெளரவ தலைவர் சமூக காவலர் க. ரவிஜான்