மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட மூன்றாவது வார்டு வரதா ரெட்டியார் நகர் உள்ளது.இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் தனிநபர் குடியிருப்பு வளாகம் கட்டி வருகின்றார் இந்த குடியிருப்பு வளாகத்தில் இருந்து அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி அனுமதி இல்லாமல் அரசு நிலத்தில் 6 அடி ஆழம் பள்ளம் தோண்டி அதில் ராட்சச பழுப்பு புதைத்துள்ளனர்.
மேலும்வழியாக குடிநீர் குழாய் இணைப்பும் செல்வது குறிப்பிடத்தக்கது.
குடிநீர் குழாய் இணைப்பும் கழிவுநீர் இணைப்பும் ஒன்று சேர்ந்தால் பொதுமக்களுக்கு டெங்கு மலேரியா வைரஸ் காய்ச்சல் மர்ம காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து
இந்த கழிவுநீர் பைப் லைன்ஆனது அங்கிருந்து பக்கத்து
வீதி வழியாக கால்வாயில் இணைக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது
குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் உடனே பேரூராட்சி அனுமதி இல்லாமல் போடப்பட்ட பள்ளத்திலிருந்து ராட்சச கழிவு நீர் பழுப்பை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.