புதுச்சேரி அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் புதுச்சேரி வளர்ச்சி பணிகள் குறித்த சீராய்வுக் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று புதுச்சேரி அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் அமைச்சர்கள் நமச்சிவாயம் தேனி ஜெயக்குமார் திருமதி சந்திர பிரியங்கா சாய் ஜெ சரவணன்குமார் தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர், அரசு செயலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் புதுச்சேரி மாநிலத்தின் நிதி நிலைமை, எதிர்கால திட்டங்களுக்கான தேவையான நிதி உதவி, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.