கலைஞர் நூற்றாண்டு கராத்தே போட்டி : டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பரிசு வழங்கல்.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அருகே டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி மாநில அளவில் கராத்தே போட்டிகள் நடைபெற்றது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு டி.ஜெ. கோவிந்தராஜன் எம்எல்ஏ பதக்கம் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட பெருவாயல் கிராமத்தில் டி.ஜெ.எஸ் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி உள்ளது.

இப் பள்ளி வளாகத்தில் நேற்று கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவில் இரண்டாம் ஆண்டு கராத்தே போட்டிகள் நடை பெற்றது.

இப்போட்டியில்12 மாவட்டத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.கத்தா மற்றும் குமித்தே ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளையும், பதக்கங்களை யும், சான்றிதழ்களையும் திருவள் ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் வழங்கி போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட னர்.முன்னதாக அனைவரையும் கவரப்பேட்டை எம்.சீனிவாசன் வரவேற்றார். முடிவில் கே.சங்கர் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *