மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்.

மன்னார்குடி அருகே மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டியை முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்தார் . இதில் 33 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பைங்கநாடு கிராமத்தில் மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த கபடி போட்டியில் , நாகை, திருவாரூர் தஞ்சாவூர், கோவை, மதுரை, சென்னை ,திருவள்ளூர் , விழுப்புரம், திருச்சி, கோயம்புத்தூர்  , பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 33 க்கும் மேற்பட்ட பெண்கள் அணியினர் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர் .

இந்த கபடி போட்டியை முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் விழா குழுவினர் தொடங்கி வைத்தனர் . இந்த கபடி போட்டியில் வெற்றி பெறும் பெண்கள் அணிக்கு முதல் பரிசு 40, ஆயிரம் , இரண்டாம் பரிசு 30 ஆயிரம் , மூன்றாம் பரிசு 20 ஆயிரம் மற்றும் சிறந்த அணியிருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளது .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *