கோவையில் நேஷனல் சிலம்பம் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக கலை சமர் எனும் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது….
கோவையில் இரண்டாவது சீசனாக நேஷனல் சிலம்பம் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக கலை சமர் எனும் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.
சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ்.தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இதன் துவக்க விழா நேஷனல் சிலம்பம் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் நந்தகுமார் தலைமை தாங்கினார்.
முன்னதாக நடைபெற்ற போட்டி துவக்க விழாவில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
இதில் தமிழகம் மட்டுமின்றி,கர்நாடகா,கேரளா,தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
சுமார் நான்கு வயது சிறுவர்,சிறுமிகள் முதல் 60 வயதான பெரியவர்கள் வரை கலந்து கொண்ட இதில் ஒற்றை சிலம்பம் இரட்டை சிலம்பம், நடு கம்பு, நெடு கம்பு,வாள் வீச்சு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன..
தமிழர் பாரம்பரிய கலைகளை மீட்கும் விதமாக தொடர்ந்து இரண்டாவது சீசனாக நடைபெறும் இதில் சிறு குழந்தைகள் கம்புகளை அசத்தலாக சுற்றியது அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது..முன்னதாக நடைபெற்ற போட்டி துவக்க விழாவில், கவுரவ அழைப்பாளர்களாக கணேஷ்குமார்,விஸ்வநாதன், நிதிலன்,சிவக்குமார்,விஜயராஜ்,உட்பட பலர் கலந்து கொண்டனர்…