ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
கொலை முயற்சி வழக்கில் 20 வருடம் தலைமறைவாக இருந்தவர் கைது திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட உள்ளிக்கோட்டை கிராமத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு எட்டு நபர்கள் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த பாலகன் என்பவரது மகன் செல்ல பாண்டியன் என்பவர் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் அந்த நபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
. இந்நிலையில் நேற்றைய தினம் அக்டோபர் 18 தேதி என்று சிங்கப்பூரில் இருந்து விமான மூலம் சென்னை வந்த செல்ல பாண்டியனை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்