கோவை மேட்டுப்பாளையம் செய்தியாளர்
சத்தியமூர்த்தி

மேட்டுப்பாளையத்தில் தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டி 2500 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2500 CBSE பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் தென்மண்டல அளவிலான நீச்சல் போட்டி துவங்கியது.

மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த நீச்சல் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் உட்பட 428 பள்ளிகளைச் சேர்ந்த 2500 மாணவ மாணவியர் பங்கேற்க உள்ளனர்.11 வயது 14 வயது 17 வயது 19 வயது என 4 பிரிவுகளாக நடக்க உள்ள நீச்சல் போட்டியின் இறுதிப் போட்டிகள் வருகின்ற 22-10-23 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

முதல் இரண்டு இடங்களை பிடித்து வெற்றி பெறுபவர்கள்
தேசிய அளவில் நடைபெற உள்ள நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.நீச்சல் போட்டிகளை பள்ளி தாளாளர் டாக்டர் மணிமேகலை மோகன்தாஸ் துவக்கி வைத்து உரையாற்றினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *