தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வீராணம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு
கீழவீராணம் பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அ.வீரப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
ஒன்றிய பணி மேற்பார்வையாளர் செந்தில் பால முருகன், பஞ்சாயத்து துணைத்தலைவர்,ஜமீலா பீவி காஜாமைதீன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள்,பிரபுதேவா, புஸ்பா ராஜா, சுமையா மரியம், பிரியா, ஞானதாஸ், சாகுல்ஹமீது, சூர்யா, வேல்முருகன், ஜெயலெட்சுமி, அனிபா,மாரியப்பன்,ஊராட்சி செயலர் பாண்டியராஜ், வாட்டர் டேங் ஆப்ரேட்டர் முருகையா, அருண், பணித்தளப்பொறுப்பாளர்கள், சுதா, மாரியம்மாள், கவிதா, பரமேஸ்வரி சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் சுய உதவி குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் , ஏராளமான பெண்கள் பெரியவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.