மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்

மன்னார்குடியில் அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி,

மன்னார்குடியில் அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களுக்கு மாதம் ஊதியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களுக்கு மாதம் ஊதியத்தை உயர்த்தி வழங்கிட கோரியும்

தீபாவளி , பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அயராது பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பள முன் தொகை மற்றும் அகவிலைப்படி வழங்க வலியுறுத்தி , மருத்துவ ஒப்பந்த நிறுவனம் UPMS ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கையுறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன முழக்கம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தில் தலைமை சங்க தலைவர் எஸ்.பாப்பையன், கோரிக்கை விளக்கவுரை ஒன்றிய செயலாளர் ஆர்.வீரமணி, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன்,ஏஐ.டி.யூ.சி மாவட்ட துணை செயலாளர் வி.கலைச்செல்வன், அமைப்புசார மாவட்ட செயலாளர் அ.காந்தி, சி.பி.ஐ நகர செயலாளர் வி.எம்.கலியபெருமாள், விவசாய சங்க செயலாளர் ஆர்.சதாசிவம், மருத்துவமனை பொறுப்பாளர்கள் சுரேஷ், விக்னேஷ், அன்பழகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *