கோயம்புத்தூரில் மாநில அளவில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் எம் ஆர் சி கல்லூரி இரண்டாமிடம்-கல்லூரியின் தாளாளர் 15000 ரூபாய் பரிசை அறிவித்தார்
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் தத்தனூர் எம் ஆர் சி உடல் கல்வியில் கல்லூரி மாணவர்கள் கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது, வெற்றியின் காரணமாக கல்லூரியின் தாளாளர் பதினைந்தாயிரம் ரொக்க பரிசை அறிவித்தார்.
கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் தத்தனூர் எம் ஆர் சி கல்லூரி இரண்டாம் இடம் பிடித்தது தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற் கல்வியியல் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான டென்னிஸ் விளையாட்டு போட்டிகள் கோயம்புத்தூர் மாருதி உடற் கல்வியியல் கல்லூரியில் .
அதில் முதல் சுற்றில் ஒய் சி எம் ஏ கல்லூரியை 6-0 என்ற கணக்கில் தத்தனூர் எம் ஆர் சி கல்லூரி வென்றது, இரண்டாவது சுற்றில் செயின்ட் ஜான் உடற்கல்வியியல் கல்லூரியை 6-0 என்ற கணக்கில் வென்றது
அதனைத் தொடர்ந்து டிஎன்பிஇஎஸ்யு கல்லூரியை 6-0 என்ற கணக்கில் வென்று தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் மாருதி உடற் கல்வியியல் கல்லூரியுடன் போட்டியிட்டு 3-6 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று மாநில அளவில் தத்தனூர் மீனாட்சி ராமசாமி உடல் கல்வியில் கல்லூரி அணி இரண்டாம் இடம் பெற்றது
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவன குழுமத்தின் தாளாளர் எம் ஆர் ரகுநாதன் 15000 ரூபாய் ரொக்கம் பரிசு வழங்குவதாக அறிவித்து பாராட்டினார் முன்னதாக விளையாட்டு துறை பேராசிரியர்கள் அன்பழகன் திருமுருகன் ஜெயபால் ராஜ சுதாகர் சுரேஷ்குமார் மற்றும் கண்ணகி தேவி ஆகியோர் சிறப்பாக பயிற்சி அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.