மதுரை திருநகர் புனித வின்சென்ட் பல்லோட்டி ஆலயத்தில் மறைக்கல்வி வார நிறைவு விழா.
மதுரை, திருநகரில் அமைந்துள்ள புனித வின்சென்ட் பல்லோட்டி ஆலயத்தில் அருட்பணி ஜார்ஜ் எட்வின் அடிகளார் தலைமையில் மறைக்கல்வி வார நிறைவு விழாவினை முன்னிட்டு காலை திருப்பலிக்குப் பின் விவிலியக் கண்காட்சி போட்டிகள் நடைபெற்றது.
பங்கின் அன்பிய பொறுப்பாளர்கள், அருட்சகோதரிகள் வழிகாட்டுதலுடன் குழந்தைகள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
பங்கு மக்கள் இணைந்து குழந்தைகளை வழி நடத்திய விதம் சிறப்பாக அமைந்தது. போட்டியில் வெற்றி பெற்ற அன்பியங் களுக்கும் பங்கு பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.