தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இலவச பொது மருத்துவ முகாம்;-
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஆசிரியர்கள் மணிவேல்ராஜ் அருணோதயம் நினைவு அறக்கட்டளை சார்பாக 30-வது ஆண்டு நினைவு தினம் மற்றும் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் டி டி ஏ நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு காமராஜர் மக்கள் முன்னேற்ற பேரவை வழக்கறிஞர் ராஜா தலைமை தாங்கினார்.
வடசென்னை காங்கிரஸ் மாவட்ட தலைவர் எம்.எஸ் திரவியம் வரவேற்று பேசினார் ஆலங்குளம் பேரூராட்சி கவுன்சிலர் வி .எஸ். கணேசன் , லிங்கவேல் ராஜா, கண்ணன் மற்றும் ஆறுமுகராஜ் முன்னிலை வகித்தனர்.
மருத்துவ முகாமை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் எஸ் ராமசுப்பு மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் மற்றும் சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் , , காங்கிரஸ் தலைவர் ஆலடி சங்கரையா ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஆலங்குளம் நகர காங்கிரஸ் தலைவர் வில்லியம் தாமஸ், வட்டாரத் தலைவர் ரூபன் தேவதாஸ், தொழிலதிபர்கள் டி.பி.வி கருணாகராஜா , ஜி.எஸ் செல்வன், ஆர்விஎல் ராமலிங்கம்,
நகர திமுக செயலாளர் வக்கீல் எஸ்.பி.டி நெல்சன் , மாவட்ட கவுன்சில் சாக்ரடீஸ்,சிவந்திபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகன், தொழிலதிபர் மணிகண்டன், முன்னாள்
கவுன்சிலர் எம் எஸ் அருணாசலம் , காங்கிரஸ் கலை இலக்கிய பிரிவு லிவிங்ஸ்டன் விமல், எம் எபிரகாஷ்,
இயேசுராஜா. நகர அ.ம.மு.க செயலாளர் எம் எஸ் சுப்பையா, வழக்கறிஞர்கள் கருப்பசித்தன், மணிகண்டன், ஆகியோர் கலந்து கொண்டார்கள்.விழா ஏற்பாடுகளை வடசென்னை காங்கிரஸ் மாவட்ட தலைவர் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் எம் எஸ் திரவியம் மற்றும் காமராஜர் மக்கள் முன்னேற்ற பேரவை செய்திருந்தனர்.
விழா முடிவில் தலைமை ஆசிரியர் மல்லிகா நன்றி கூறினார்.
மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.