தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியா வின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஆலங்குளம் பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் நகர தலைவர் வில்லியம் தாமஸ் தலைமை தாங்கினார்.
ராஜ்குமார் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் எஸ் ராமசுப்பு,
சென்னை பெருநகர மாமன்ற உறுப்பினர்
எம்.எஸ் திரவியம்,கலை இலக்கிய அணி மாநில துணை தலைவர் ஆலடி சங்கரையா,ஆலங்குளம் வட்டார தலைவர்
ரூபன் தேவதாஸ்,மாவட்ட செயலாளர் அலெக்ஸாண்டர், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
அதனையெடுத்து இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் திருவுருவப்படத்திற்கு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது
இந் நிகழ்ச்சியில் மாநில ஒபிசி பிரிவு
எம்.ஏ. பிரகாஷ்தலைவர் .எம்ஸ் அருணாசலம், செல்லமணி, பொன்னுச்சாமி,பிஸ் என் எல் ராஜேந்திரன், குணசேகரன், துரைப்பாண்டி , தமிழ்மணி,சுந்தரம், பொன்னுத்துரை, ஐசக் இமானுவேல், லெனின் , காசி பெருமாள்ஆர் ஜீபி ஆர்.எஸ்
ஏசுராஜா , மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்,நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கலை இலக்கிய அணி தலைவர் லிவிங்ஸ்டன் விமல் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.