புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் நூல் வெளியீட்டு விழா
புதுச்சேரி கவிதாயினி இராஜஸ்ரீமகேஷ் எழுதிய ஐந்து நூல்கள் வெளியிடப்பட்டன.
கவிதாயினி இராஜஸ்ரீமகேஷ் எழுதிய மெளவல்மொழி,மகரயாழ், மூங்கில் இசை,,மழலை அமுது மதிப்பேற்றமும் கடல் உணவும் ஆகிய ஐந்து நூல்கள் வெளியிடப்பட்டன.
இதற்கான விழாவுக்கு முன்னால் சட்டப்பேரவைத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கிப் பேசினார்.பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவர் எழுத்தாளர் கோ.பாரதி முன்னிலை வகித்து உரையாற்றினார்.
தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து வாழ்த்திப் பேசினர்
தலைமை ஆசிரியர் ஜாக்குலின்பாபு , கவிஞர் சுந்தர முருகன், இளவரசி சங்கர் , ஞா.கலலையரசி, அவ்வை நிர்மலா, இராணி புஷ்பராஜ், மகேஷ், விஷ்ணுப்பரியன், ஹரிகரன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
நூலாசிரியர் இராஜஸ்ரீமகேஷ் ஏற்புரை ஆற்றினார்.