செய்தியாளர்.ச.முருகவேலு புதுச்சேரி
நெட்டப்பாக்கம்

புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் நவம்பர் 14 நெட்டப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ பர்வதவர்த்தினி சமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துக்குமாரசுவாமி கந்த சஷ்டி பிரம்மோற்சவ கொடியேற்று விழா நடந்தது.

முன்னதாக விக்னேஸ்வரர் பூஜை, புற்றுமண் எடுத்தல் வாஸ்து சாந்தி நடந்தது. அதனைத் தொடர்ந்து ரிஷப லக்கினத்தில் ஶ்ரீ முத்துக்குமாரசுவாமி சன்னிதில் அலங்கரிக்கப்பட்ட ஶ்ரீ முத்துக்குமாரசுவாமி, ஶ்ரீ வீரபாகு சுவாமிகளுக்கு வேத மந்திரங்கள் முழங்க காப்பு கட்டப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நவ வீரபாகு தேவர்கள் அனைவருக்கும் காப்புகள் கட்டப்பட்டன. பின்னர் மேளதாளம் முழங்க முருகன் சன்னிதியில்உள்ள துவஜஸ்த்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வாணவெடி முழங்க மேளதாளத்துடன் மின் விளக்கு அலங்காரத்தில் ஶ்ரீ முத்துக்குமாரசுவாமி வீதியுலா நடந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *