தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் திருநெல்வேலி ஸ்ரீ சக்தி மருத்துவமனை இணைந்து நடத்தும், இலவச எலும்பு ஸ்கேன் பரிசோதனை முகாம்
நாளை சனிக்கிழமை (நவ. 25-11-2023) காலை 10 மணி முதல் பிறபகல் 2 மணிவரை நடைபெறுகிறது.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எம்.திவ்யா மணிகண்டன், ஸ்ரீ சக்தி மருத்துவமனை மருத்துவர் எஸ்.வெங்கடேஷ் பாபு ஆகியோர் கூட்டாக வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எம்.திவ்யா மணிகண்டன் ஏற்பாட்டில், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெறும் இம்முகாமில், ‘
ஸ்ரீ சக்தி மருத்துவமனை மருத்துவர்கள் எஸ்.வெங்கடேஷ் பாபு, சி.சுமதி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் கலந்துகொண்டு, பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கி ன்றனர்.
முகாமில் மூட்டு தேய்மானம், மூட்டு வீக்கம், இடுப்பு மற்றும் கழுத்து வலி, மாதவிலக்கு நின்ற பெண்கள், தண்டுவட மற்றும் வாதநோய் பிரச்சனை, தோள் பட்டை அல்லது மணிக்கட்டு வலி, உடல் எடை குறைவு மற்றும் கூன் விழுதல், முதுகு வலி உள்ளிட்ட அனைத்து விதமான எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் தீர்வு காணலாம்.
மேலும், வருங் காலங்களில் எலும்பு பலவீனத்தால் எலும்பு முறிவு பாதிப்புக் குள்ளாகாமல் இருக்கும் வகையில், முகாமிற்கு வருபவர்களுக்குரூ.2 ஆயிரம் மதிப்புள்ள எலும்பு ஸ்கேன் பரிசோதனை முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது.
எனவே, முன்பதிவு செய்துகொள்ள விரும்புவோர்
94425 91760, 94878 10000 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.