பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் அரசு தலைமை கொறடா கோவி. செழியன் பங்கேற்பு
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா தலைமையில் பாபநாசத்தை சுற்றியுள்ள அரசு பள்ளியில் பயிலும் ஐந்து மாணவ மாணவிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டு சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் பேசினார்கள்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அரசு தலைமை கொறடா கோவி செழியன் கருத்தரங்கில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற பேரவை கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன் இணை செயலாளர் பாண்டியன் ஒன்றிய செயலாளர்கள் நாசர், தாமரைச்செல்வன் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் உட்பட அரசு அதிகாரிகள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.