பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவர்கள்;-
தென்காசி ஒன்றியம் பண்பொழி பேரூராட்சிக்கு உட்பட்ட கந்தசாமிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் யோகா போட்டியில் பங்கு கொண்டு பதக்கங்கள் வென்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மற்றும் யோக அமைப்பின் சார்பில் செங்கோட்டை ட்ரெஸ்ஸர் ஐலேண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற யோகா போட்டியில் பங்கு கொண்டு முதல் மூன்று பரிசுகளை பெற்றனர். முதல் பரிசாக நவீன் கார்த்திக், இரண்டாம் பரிசாக பவானி, கர்தீஷா, ஆகிய இருவரும் மூன்றாம் பரிசாக மாதேஷ் மற்றும் கிருபாலினி ஆகியோரும் பரிசுகளை பெற்றனர்.
யோகா அமைப்பின் சார்பில் கேடயமும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் குத்தாலிங்கம், உதவி ஆசிரியர் ராஜ்குமார், யோகா கலை பயிற்சி ஆசிரியை உமா மகேஸ்வரி, பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் மாலா, ஊர் நாட்டாண்மைகள் நடராஜன், கருப்பசாமி, தங்கதுரை, மற்றும் ஊர் பெரியவர்கள் கல்வியாளர் சீதாராமன் ஆகியோர் பாராட்டினார்கள்.