வால்பாறையில் கஞ்சா வழக்கு துரிதமாக செயல்பட்ட காவல் துறையினருக்கு எஸ்.பி.பத்திரி நாராயணன் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டு
கோவை மாவட்டம் வால்பாறை காவல் துறையினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்திரி நாராயணன் உத்தரவிற்கிணங்க துணைக்கண்காணிப்பாளர் ஸ்ரீ நிதி ஆலோசனையின் பேரில் கடந்த 1 ஆம் தேதியன்று துரிதமாக செயல்பட்டு நான்கு கிலோ கஞ்சாவுடன் ஐந்து நபர்களை கைது செய்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் பத்திரி நாராயணன் வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் துணை ஆய்வாளர் முருகநாதன் அடங்கிய காவலர்கள் மணிகண்டன்,பிரான்சிஸ் சேவியர், கார்த்தி ஆகியோரை நேரில் வரவழைத்து அவர்களின் துரிதப்பணியை பாராட்டியதோடு சான்றிதழ், பரிசு மற்றும் தனிப்பிரிவு, தனிப்படை குழுவிற்கு ரிவார்டாக ரூ.5 ஆயிரம் ரொக்கமும் வழங்கி வால்பாறை பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை முற்றிலும் ஒழிக்கவும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்க் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார் இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் வால்பாறை காவல் துறையினரை பாராட்டி வருவது காவல் துறையினருக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது