வலங்கைமான் பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் கடைவீதியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில், கல்விக் கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் அரசு பள்ளிகளில் மாதந்தோறும் நடைபெறும் பள்ளி வேளாண்மை குழு கூட்டமானது மூணு மாதத்திற்கு ஒருமுறை கூட்டினால் போதும் என்ற விவாதத்தை எதிர்த்து மாதம் ஒரு முறை நடத்த வேண்டும், அப்படி நடத்தினால் தான் பள்ளிக்கும், மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கும் நெருங்கிய தொடர்பு கிடைக்கும், அதோடு மட்டுமில்லாமல் மாணவர்களின் படிப்பு, பள்ளியின் தூய்மை, சுற்றுச்சூழல் சுகாதாரம், கழிவறை தூய்மையின் கண்காணிப்பு போன்றவற்றை எங்களாலும், பெற்றோர்கள், பார்வையாளர்கள் கவனிக்க முடியும்,மேலும் பள்ளி கட்க்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பு மேலும் அதிகரிக்கும்.

எனவே இந்த கையெழுத்து இயக்கம் மூலம் பொதுமக்களுக்கும், முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், முதல்வருக்கும் கோரிக்கையை வைக்கிறோம் என்றும், பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் போது முதல் கையெழுத்ததாக வட்டார காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி கையெழுத்திட்டார்.

தொடர்ந்து பொதுமக்கள் கையெழுத்து விட்டனர் இதில் சமூக ஆர்வலரும், ஆசிரியருமான புவனேஸ்வரி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆப்சாத் பேகம், நடுத்தெரு பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் சண்முகப்பிரியா, கோவிந்தகுடி பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் நவ்ஷாத் பேகம் மற்றும் உறுப்பினர்கள் செழியன், முருகன், புஷ்பவல்லி, கம்யூனிஸ்ட் கலிய பெருமாள், காங்கிரஸ் மருதமுத்து மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர், முடிவில் மேலாண்மை குழு பார்வையாளர் குலாம் மைதீன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *