செய்தியாளர்.ச.முருகவேலு புதுவை
புதுவை மாநிலம் நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் ஏஎன் எம் எம் செல்வமணி அனைவரையும் வரவேற்று பேசினார் டாக்டர் முகந்தி ஏழுமலை தலைமையேற்று கருத்துரை வழங்கினார் சித்த மருத்துவ டாக்டர் சிவசங்கரி பல் மருத்துவர் டாக்டர் ஹெலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருப்பரங்கில் டெங்கு நோய் எவ்வாறு வருகிறது அதை தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் என்னென்ன என்று டாக்டர் முகந்திஏழுமலை, டாக்டர் சிவசங்கரி விரிவாக பேசினர். பங்குபெற்ற அனைவருக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு அருந்தினர். ஆஷா பணியாளர் தமிழரசி, டி.இ.ஓ. திவ்யா உட்பட பலர் கலந்துகொண்டனர்.