நாமக்கல்

நாமக்கல் மோகனூர் சாலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவில் உள்ளது.

இக்கோவிலில் 108 சங்காபிஷேகம் இன்று சனிக்கிழமை நடைபெற்றது சங்குகள் சுற்றி புஷ்பங்கள் வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து அக்னி குண்டம் வைத்து புரோகிதர்கள் வேத மந்திரம் ஓதி ஹோமம் செய்தனர்.

அதை தொடர்ந்து ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்பட 18 வகையான வாசனை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது இதில் திரளான ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *