காவலர்களுக்கான மாநில அளவிலான திறனாய்வுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டு:
சென்னை தமிழ்நாடு காவல்துறை அகடமியில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக 2023-ம் ஆண்டிற்கான காவல் துறையினருக்கான மாநில அளவிலான திறனாய்வுப் போட்டி (கடமை சந்திப்பு)
1) நாய் நிகழ்வு
2) நாசவேலை எதிர்ப்பு
3) கணினி விழிப்புணர்வை சரிபார்க்கவும்
4) வீடியோகிராபி
5) விசாரணைக்கு அறிவியல் உதவிகள்
ஆகிய தலைப்புகளின் கீழ் நடைபெற்றது.
இப்போட்டியில் மதுரை மாநகரைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் இரண்டு தங்கப் பதக்கங்களும், மூன்று வெள்ளி பதக்கங்களும், மூன்று வெண்கல பதக்கங்களும் மூன்று கேடயங்களும் வென்றுள்ளனர்.
குறிப்பாக மதுரை மாநகர் துப்பறியும் நாய் பாண்டியன் போதை மருந்து துப்பறியும் பிரிவில் தங்கம் வென்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்து சாதனை பெற்றுள்ளது.
மாநில அளவில் பதக்கங்கள் பெற்ற அனைவரையும் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.