புதுவை முழுவதும் ப்ரிபெய்டு மின்மீட்டர் பொருத்துவதற்கு மக்களிடம் எதிர்ப்பு வலுத்துவருகிறது. இந்தியா கூட்டணி சார்பில் தினம், தினம் போராட்டங்கள் புதுவையில் ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று நெட்டப்பாக்கம் விவசாயிகள் 50−க்கும் அதிகமானோர் ஒன்றுதிரண்டு ஏரிப்பாக்கம் துணை மின்நிலையம் சென்று தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

அம்மைநாதன், ஜெயராமன், ஆதிமூலம், ராஜாமணி, சீனுவாசன், பங்காரு, மணிகண்ணன், சதாசிவம், குரு உட்பட 50− க்கும் அதிகமானோர் ஏரிப்பாக்கம் துணை மின்நிலையம் சென்று தங்கள் கோரிக்கையை மனுவாக உதவிப்பொறியாளர் அன்பழகனிடம் கொடுத்தனர்.

அதனை பெற்றுக்கொண்ட உதவிப்பொறியாளர் அன்பழகன் மேல் அதிகாரிகளிடம் இம்மனுவை கொடுத்து தக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

அதனைத்தொடர்ந்து விவசாயிகள் குழு அப்படியே கரியமாணிக்கம் மின்துறை அலுவலகம் வந்து இளநிலைப் பொறியாளர் முருகனிடம் மேற்படி மனு காப்பியை வழங்கி ப்ரிபெய்டு மின்மீட்டர் பொருத்துவதை நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *