காரைக்கால் கார்னிவல் நிகழ்ச்சிக்கு ரூபாய் 94-இலட்சம் கொடுத்ததற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் அவர்களுக்கும், அதுபோல் அந்த நிகழ்ச்சியோடு இணைந்து நடத்த இருக்கின்ற மலர்கண்காட்சிக்கும் ரூபாய் 50- இலட்சம் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதனை ஏற்று வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் அவர்களும் அதற்கான ஒப்புதலை தந்தார்கள்.
இருவர்களையும் சட்டமன்ற உறுப்பினர் A.M.H. நாஜிம், MLA அவர்கள் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.
மேலும் சுற்றுலாத்துறை செயலர் மணிகண்டன் IAS மற்றும் வேளாண்துறை செயலர் ஜெயந்தகுமார் ரே IAS அவர்களையும் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள் .. அதுபோல் இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான அனைத்து கோப்புகளையும் தயார் செய்து புதுவைக்கு அனுப்பிய மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் IAS அவர்களுக்கும் புதுச்சேரியில் தனது நன்றியை A.M.H.நாஜிம், MLA அவர்கள் தெரிவித்தார்.