பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கபிஸ்தலத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 107 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் காமராஜ் பங்கேற்பு.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கிழக்கு ஒன்றியம் சார்பாக கபிஸ்தலத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் துரை. சண்முகபிரபு தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழக அமைப்பு செயலாளருமான காமராஜ் மாவட்ட செயலாளர் ரத்தினசாமி தலைமை கழக பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ் அதிமுக கட்சி ஒன்று இல்லாவிட்டால் தமிழகத்தை திமுக கட்சி கபிலிகரம் செய்திருக்கும் என பேசினார். அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் அதிமுக சார்பில் புடவை வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய செயலாளர்கள் சார்பு அணி செயலாளர்கள் நிர்வாகிகள் கிளை கழக செயலாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.