புதுச்சேரி இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா கண் கவர் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

புதுச்சேரி இமாகுலேட் பெண்கள் மேல்நி விழாவிற்கு பள்ளி முதல்வர் அருட்சகோ. ஜான் ஹில்டா ஆண்டறிக்கை வாசித்து பள்ளியில் 25 ஆண்டுகள் செம்மையாக பணி முடித்த இரண்டு ஆசிரியர்களை கௌரவித்து சிறப்பு பரிசு வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக திருவனந்தபுரம் இஸ்ரோ விஞ்ஞானி திருமதி எழிலரசி கலந்து கொண்டு மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். ஜிப்மர் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர் திருமதி கலையரசி சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரம் மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளை செய்து அனைவரையும் மகிழ்வித்தார்கள்.

பெற்றோர் 3000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள் விழா வுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் மதர் சுப்பி ரியர் அருட்சகோ ஜெசிந்தா மேரி மற்றும் இதர கன்னியர்கள் ஆசிரியர் பெருமக்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் அனைத்து ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *