திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பஸ் ஸ்டாண்ட் காளியம்மன் கோவில் தெரு ஸ்ரீ வைத்திய காளிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வருடம் தோறும் வலங்கைமான் பகுதியில் முதல் திருவிழாவாக நடைபெறுவது வழக்கம்.

அதேபோன்று இந்த ஆண்டு வழக்கம்போல் வலங்கைமான் பாலக்கரை குடமுருட்டி ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்து அபிஷேக ஆராதனைகளும், வெள்ளி கவசம் அலங்காரமும், தீபாரதனையும், அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிர சாதமும், கஞ்சி வார்த்தலும், அதனைத் தொடர்ந்து தனியார் திருமண கூடத்தில் அன்னதானமும் நடைபெற்றது.

மாலை சிதம்பரம் ஜி.ராமலிங்கம் குழுவினரின் காளி ஆட்டம் கலை நிகழ்ச்சி உடன் அம்மன் வீதி உலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நாளை ஞாயிற்றுக்கிழமை விடையாற்றி விழா நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை மருத்துவ சமூகத்தினர்கள் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *