நிறம் மாறும் பச்சோந்தி அல்ல!.சாகும் வரை ஓரே கட்சியில் இருப்போன்.தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்.பி உதயகுமார் ஆவேச பேச்சு.
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் நடந்த தேனி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராணயசாமியை ஆதரித்து நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தி அல்ல நான் சாகும் வரை அதிமுக கட்சியில் இருப்பேன் என ஆவேசமாக பேசி இரட்டை இலை சின்னத்திற்கு பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.
தேனி பாராளுமன்ற அதிமுக வேட்பாளரை ஆதரித்து சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முள்ளிப்பள்ளம் கிராமத்தில் நேற்று மதியம் 2.30.மணியளவில் மதுரை மேற்கு மாவட்ட செயலாளரும் எதிர் கட்சி துணை தலைவருமான ஆர்.பி. உதயகுமார் அதிமுக வேட்பாளர் நாராணயசாமியை ஆதரித்து இரட்டை சின்னத்திற்கு பொதுமக்களிடையயே திறந்த வேனில் நின்றபடி வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது ஆர்.பி உதயகுமார் பேசியதாவது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலம் பொற்கால ஆட்சியாகும் 2.கோடியே 88.லெட்சம் பேருக்கு பொங்கல் பரிசு மாணவர்களுக்கு மடிக்கணிணி தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு நல திட்டங்கள் அதிமுக ஆட்சியில் ஏழை எளிய நடுத்தர மக்களளின் மேம்பாட்டிற்காக வழங்கப்பட்டது.
தற்போது நபைபபெறும் திமூக ஆட்சியில் குடும்பதலைவிகளுக்கு ஊக்கத்தொகை பெயரில் பாகுபாடு பார்த்து வழங்கப்படுகின்றது.
மேலும் திமுக வேட்பாளராக உள்ள தங்கதமிழ் செல்வம் பச்சோந்தி போல் அடிக்கடி கட்சி மாறி வேட்பாளராக களம் கண்டு தோல்வியை தழுவியவர்.இவருக்கு பாஸ்சாக தினகரன் இன்றளவும் செயல்பட்டு வருகின்றார்.
ஆனால் நான் நேற்று அதிமுக இன்றும் அதிமுக நாளையும் அதிமூக என்று சாகும் வரை ஓரே கட்சியில் இருப்போன்.என ஆவேசமாக பேசி பொதுமக்களிடையே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.இதன் பின் கச்சிராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மமேற்கொண்டார்.
அப்போது மாநில நிர்வாகி தமிழகன். தேர்தல் பொறுபாளர் மாணிக்கம் ஒன்றிய செயலாளர் கணேசன்.மாநில நிர்வாகி ராஜேஷ்கண்ணா. கிளை நிர்வாகி சேது.குருவித்துறை பாபு. வழக்கறிஞர் காசிநாதன்.தென்கரை ராமலிங்கம் பேருர் நிர்வாகி மணிகண்டன். மன்னாடிமங்கலம். ராஜபாண்டி.உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்