திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மற்றும் ஊர்காவல் படையினருக்கு தேர்தல் பாதுகாப்பு பணி தொடர்பாக அறிவுரை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
2024 – பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை காவல் அதிகாரிகள் ஆளினர்கள் மற்றும் ஊர்காவல் படையினருக்கு தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்தும் வாக்குப்பதிவு நாளன்று எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும், ஒவ்வொரு பணிகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று (13.04.2024) எடுத்துரைத்து அறிவுரை வழங்கினார்.
நிகழ்வின்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) டி. ஈஸ்வரன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.
(சைபர் கிரைம்) வி.அருள்செல்வன் திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு ஆயுதப்படை) எஸ் .பழனிச்சாமி மற்றும் ஊர்காவல் படை வட்டார தளபதி அரவிந்தன் ஆகியோர் உடனிருந்தார்கள்.