பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தில் ஆலத்தூர் கேட் செல்லும் ரோட்டில் வேளாண்மை உதவி பொறியாளர் சத்திய தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் .அப்போது அந்த வழியாக அதே கிராமத்தைச் சேர்ந்த அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் என்பவர் வந்த காரை சோதனை செய்வதற்கு நிறுத்தி சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 8 லட்ச ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

‌பின்னர் அதிமுக ஒன்றிய செயலாளர் சசிகுமார் வயலில் விளைந்த  வெங்காயத்தை வியபாரிகளிடம் விற்பனை செய்ததற்க்காக பெறப்பட்ட தொகை என்று சில வெங்காய வியாபாறிகளையும் உடன் அளைத்து வந்து தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டார். பின்னர்  அதிகாரிகள் தேர்தல் முடிந்த பின்பு கைப்பற்றப்பட்ட பணத்தை வழங்குவதாக தெரிவித்ததை அடுத்து சசிகுமார் புறப்பட்டுச் சென்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *