வேலூர் எம்பி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்துக்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் வாழ்த்து!
வேலூர்,
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ.சி. சண்முகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .அதில் ஏ.சி. சண்முகம் ஆகிய உங்களுக்கு கடிதம் எழுதுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
வேலூரில் நீங்கள் செய்த பணிக்கு உங்களை நான் மனதார வாழ்த்துகிறேன். மக்களின் ஆசிர்வாதத்துடனும், அவர்களது உறுதுணையுடன் நீங்கள் பாராளுமன்றத்தை அடைவீர்கள். தேர்தலில் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை முன்னதாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் பிரதமர் மோடி குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார்.