கும்பகோணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ம.க. ஸ்டாலின் குடும்பத்துடன் வாக்கு பதிவு.
தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் இச இன்று ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் தேசிய முற்போக்கு கூட்டணியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டும் வேட்பாளர் ம.க ஸ்டாலின் திருவிடைமருதூர் தாலுகா
ஆடுதுறை அருகே மருத்துவக்குடியில் உள்ள ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில்
தனது குடும்பத்துடன் வந்து தனது முதல் வாக்கை செலுத்தினார்.
இதுபோல் சூரியனார் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள்,சூரியனார் கோவில் ஆதீனம் 28 வது குருமகா சந்நிதானம் தனது வாக்கு பதிவை செலுத்தினார்.