ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கத்தைப் பொருட்படுத்தாமல் பள்ளிகளில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளை பள்ளிக்கல்வித்துறை தடுத்து நிறுத்த கோரிக்கை
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொது செயலாளர் ஆர் ரமேஷ் கோரிக்கை
தமிழக அரசின் கல்வித் துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது
கோடை காலத்தில் கடும் வெப்பத்திலிருந்து மாணவர்களைக் காப்பதற்காகவும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது
தமிழகத்தில் கடுமையான கோடை காலம் துவங்கும் முன்பே பரவலாக 105 க்கும் மேல் வெப்பநிலை இருந்து வருகிறது முதியவர்களும் பொதுமக்களும் நோயாளிகளும் இந்த வெப்ப அலையை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நாளை மற்றும் நாளை மறுதினம் இரண்டு தேர்வுகள் நடைபெற இருக்கும் சூழலில் வெயிலில் தாக்கம் அதிகரித்து உள்ளது மேற்படி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செய்து கொடுக்க வேண்டும்
இத்தகைய சூழ்நிலையில் சில தனியார்ப் பள்ளிகள் கோடை விடுமுறைக் காலங்களில் பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்த இருப்பதாக தெரிய வருகிறது மேலும் பள்ளி சீருடை இல்லாமல் மாற்று உடையில் மாணவர்களை அழைத்து தனியாகச் சிறப்பு வகுப்புகளை நடத்துவதாகத் தெரிய வருகிறது இது மாணவர்களின் மீது உளவியல் சார்ந்த மனஅழுத்தத்தை உருவாக்கும் மேலும் பள்ளியின் வளர்ச்சிக்காவும் மாணவர் சேர்க்கைக்காவும் கூடுதல் மதிப்பெண்களைப் பெறுவதற்காகக் குறுக்கு வழியில் தனியார்ப் பள்ளிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அனுமதிக்க கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்
எனவே பள்ளிக்கல்வித்துறை உடனடியாக கோடை விடுமுறை காலத்தில் சிறப்புவகுப்புகள் நடத்தாமல் மாணவர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மையத்தின் பொது செயலாளர் ஆர் ரமேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்