ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
மாணவ, மாணவிகளுக்கான “என் கல்லூரி கனவு” விழிப்புணர்வு திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கான “என் கல்லூரி கனவு” விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் “என் கல்லூரி கனவு” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்கள் 12ஆம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்விக்கு சரியான வழியை ஏற்படுத்தித்தருவதற்காக அமைக்கப்பட்டுள்ளது இத்துறையின் மூலம் சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வருகை தந்துள்ளனர்.
மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற. மாணவிகள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள் பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன
என்பதையும் கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போட்டித்தேர்வுகள் மற்றும் தொழில் வழிகாட்டல், ஊக்கப்படுத்துதல் வங்கிக்கடன் மற்றும் உதவித்தொகை பெறுதல் போன்ற விவரங்கள் புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றது
இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும் வெற்றி பெறவும் வழிவகை செய்யும். மேலும், தோல்விகளை வெற்றிகளின் தொடக்கமாக மாணவர்கள் எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தேர்ச்சி பெற்ற அனைத்து மாணாக்கர்களும் சிறந்த வாய்ப்புகளுக்கு எந்த கல்லூரியில் என்ன படிக்கலாம் வருங்காலத்தை வளப்படுத்த எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கலாம் உதவித்தொகை வாய்ப்புகள் என்ன போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள வாய்ப்பினை பயன்படுத்தி சரியான உயர்கல்வியைத் தேர்ந்தெடுத்து வாழ்வில் வெற்றிப்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றம், மாநில சட்ட ஆலோசகர் கணபதி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அமுதா தாட்கோ மாவட்ட மேலாளர் அன்பழகன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன் சென்னை மேலாண்மைத்துறை பேராசிரியர் மரு.கோபி சவளக்காரன் அரசு(ஆ.தி.ந) மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இரமேஷ் கருத்தாளர்கள் அருள் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்