பெரம்பலூரில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள்
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு பயன்படும் வகையில் ஏற்கனவே 500 லிட்டர் கொள்ளளவுள்ள தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இருப்பினும் கடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் கூடுதலாக தண்ணீர் தொட்டிகள் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததையடுத்து, பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேலும் தலா 500 லிட்டர் கொள்ளளவுள்ள இரண்டு தண்ணீர் தொட்டிகள் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டது.