செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம், நகரகாவல்நிலையம் அரசுமருத்துவமனை திருக்கழுக்குன்றம் சாலை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலை என சாலைகளை ஆக்ரமித்து மாடுகள் கூட்டம் கூட்டமாக சாலையின் நடுவில் நின்று கொண்டு சகட்டுமேனிக்கு சுற்றித்திரிகின்றன
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

அதிலும் குறிப்பாக செங்கல்பட்டு நகராட்சி அருகிலேயே காவல்நிலையம் எதிரில் சாலையின் நடுவில் நின்று கொண்டு மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கொண்டும் ஓடுவதும் படுத்து கொள்வதுமாய் இருந்து வருகிறது.

இதனால் கார் வேன் பேருந்துகள் உள்பட எந்த வாகனமும் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நகராட்சி அருகிலேயே காவல்நிலையத்தை ஒட்டியே நடக்கும் இதுபோன்ற சம்பவங்களை நகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் இருந்துவருவதாக வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

புகார் அளித்தால் அடுத்த ஓரிரு நாட்கள் மாடுகளை பிடித்து நடவடிக்கை எடுப்பதுபோல் எடுத்து பாவ்லா காட்டிவிட்டு அடுத்த வேலைக்கு சென்று விடுகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *