பெரம்பலூர் அருகே குடிநீர் கிணறு அருகே அமைக்கப்பட உள்ள கதிர் அடிக்கும் களத்தினை மாற்று இடத்திற்கு அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் மேட்டுப்பாளையம் கிழக்குப் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டு கதிர் அடிக்கும் களம் மற்றும் தானியக்கிடங்கு பணிகள் துவங்குவதாக அரசு ஆரம்ப துணை சுகாதாரம் நிலையம் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் கிணறு அருகே பணி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது

இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் கிணறு உள்ளதால் இப்பகுதியில் கதிர் அடிக்கும் களம் மற்றும் தானியக்கிடங்கு அமைக்க வேண்டாம் என்றும் ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் மனு அளித்தினர்

இவ்விடத்தில் கதிர் அடிக்கும் களம் அமைத்தால் குடிநீர் மாசு ஏற்படும் என்றும் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் உள்ளதால் நோயாளிகள் வரும் பொழுது பாதிப்பு ஏற்படும் என்று இவ்விடத்தில் அமைக்க வேண்டாம் என்றும் பொதுமக்கள் சார்பில் கூறப்பட்டது

ஆனால் அதனை ஏற்காமல் அப்பகுதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி இவ்விடத்தில் தான் இந்த பணி நடைபெறும் நீங்கள் சொல்லுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இந்த பணி இவ்விடத்தில் நடைபெறும் என்று அவ்விடத்தில் சுத்தம் செய்தனர் இத்தகவலை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அப்பகுதி பொது மக்கள் ஒன்று சேர்ந்து இவ்விடத்தில் பணி நடைபெற கூடாது என்று தடுத்தனர் இதனால் போது சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது .

பொதுமக்கள் ஒன்று சேர்ந்துஇதனை தடுத்தனர் இதனால் இப்பகுதியில் அமைக்காமல் திரும்பி சென்றனர் . அதனால் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சம்மந்தபட்ட இடத்தில் தலையிட்டு எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் சரி செய்து பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் பணி நடைபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *