தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த கோவிலாச்சேரியில் அன்னை கல்வி குழுமத்தின் சார்பில் அன்னை பல் தொழில்நுட்ப கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா பல் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் கல்வி குழு தலைவர் அன்வர் கபீர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தாளாளர் அப்துல் கபூர் முன்னிலை வசித்தார். இதில் மாநில அரசு உரிமையியல் வழக்கறிஞர் பாலமுருகன் கலந்துகொண்டு 881க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்
விழாவில் கல்லூரி முதல்வர் சபாநாயகம், தேர்வு அலுவலர் சுவாமிநாதன், துணை முதல்வர் ராஜகுமார், நிர்வாக அதிகாரி கௌதம், மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.