தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா அச்சிறுப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அவர்களின் ஆலோசனைப்படி சுட்டெரிக்கும் வெயிலில் பொதுமக்களின் தாகம் தீர்க்க தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்று வருகிறது

அதன் ஒரு பகுதியாக அச்சிறுப்பாக்கம் திண்டிவனம் மார்கம் பேருந்து நிலையம் அருகே மாவட்டத் தலைவர் ஜி.ஜெ.பிரபாகரன் முன்னிலையில்
மாவட்ட இணை செயலாளர் எஸ்.அப்துல்ரசாக் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.


சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.உசேன்,
வி.டி.ஆர்.வி.எழிலரசன் கலந்து கொண்டனர்.
இதில் சங்க செயலாளர் சையதுமுகமது,
பொருளாளர் பி.திலீப்குமார்,துணை செயலாளர்
ஜ.அசாருதீன், உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.

மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தினமும் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு நீர்மோர் இளநீர் தர்பூசணி நுங்கு உள்ளிட்டவர்களை
வழங்கி வருகின்றனர்.

மேலும் அச்சிறுப்பாக்கம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் உரிப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *