பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்
உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் 20-ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நடிகர் விஜய்யின் திரைப்படம்..
அனைத்து பட வசூல் சாதனையை முறியடித்ததை தொடர்ந்து, சோளக்கருதுகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜய் ரசிகர்கள்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இயங்கி வரும் சக்தி சினிமாஸ் திரையரங்கம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான கில்லி திரைப்படம், இரண்டு வாரங்களுக்கு முன்பு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. 20-ஆண்டுகளுக்கு முன்பு தியேட்டர்களில் திரையிடப்பட்டு மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இந்த திரைப்படம் அனைத்து திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்து விட்டதாக கூறி, விஜய் ரசிகர் மன்றத்தினர் சார்பில், ரசிகர்கள் சக்தி சினிமாஸ் தியேட்டரின் ஊழியர்களுக்கு சால்வையைகள் அணிவித்து மரியாதைகள் செய்தும், தமிழர்கள் கலாச்சாரத்தை போற்றும் வகையில் சோளக்கருதுகளை வழங்கியும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து விஜய்யின் ரீ.ரிலீஸில் வெளியான கில்லி திரைப்படத்தை சக்தி சினிமாஸ் திரையரங்கில் பார்த்து ரசித்தனர். இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மத்திய மாவட்ட பொறுப்பாளர் விஜய் சரவணன் , தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் நிஜாம் தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடேஷ் தெற்கு ஒன்றிய தலைவர் ராஜா , பாபநாசம் நகர தலைவர் உதய சூர்யா , தஞ்சை நகர தலைவர் பாரி, தஞ்சை துணைத் தலைவர் முத்துக்குமார் , குடந்தை தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் குமர பாண்டி மற்றும் ஏராளமான விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.