ஏழை மாணவிக்கு தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தரங்கம்பாடி சமூக வலைதள நண்பர்களின் பங்களிப்பு. 21,500 ரூபாய் நிதியை மாணவி மகேஷ் அவர்களிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பொறையார் ராஜூவ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மாணவி மகேஷ். இவர் தரங்கம்பாடியில் உள்ள புனித தெரேசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு B.Com CA பிரிவில் பயின்று வருகிறார்.

மாணவி மகேஷ் மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும் ஜம்மு காஷ்மீரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மாணவி மகேஷ் போட்டியில் கலந்து கொள்ள ரூபாய் 21000 செலவாகும் என சக நண்பர்கள் மூலம் அறிந்த தரங்கம்பாடி சமூக வலைத்தள நண்பர்களின் பங்களிப்புடன் மாணவிக்கு தேவையான 21,500 ரூபாய் சேகரிக்கப்பட்டு மாணவி மகேஷிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உதவும் மனம் படைத்த நல் உள்ளங்களின் பங்களிப்பில் கிடைத்த தொகை ரூபாய் 21500 ஐ சமூக ஆர்வலர்கள் ராஜூவ்புரம் காசிராஜன், லயன் சகாயராஜ், விஜயவேல், ராஜூவ்புரம் கனகசபை, ராஜேஷ், ஹைடெக் முரளி ஆகியோர் மாணவி மகேஷிடம் ஒப்படைத்தனர்.

மாணவி மகேஷ் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்று நமது தரங்கம்பாடிக்கும் நமது நாட்டிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *