கீழப்பாவூரில் கலைஞர் நீர் மோர் பந்தல் சுரண்டை வே.ஜெயபாலன் திறந்து வைத்தார்

தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் ஏற்பாட்டில், திமுக சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் நீர் மோர் பந்தலை மாவட்ட பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் திறந்து வைத்தார்.

தென்காசி தெற்கு மாவட்டம், கீழப்பாவூர்வடக்கு பேருந்து நிறுத்தத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் ஏற்பாட்டில் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு கலைஞர் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.

பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை வகித்தார். கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன்பாண்டியன், கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பொன்அறிவழகன், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், இளநீர், பழங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜாமணி, நிர்வாகிகள் வேலாயுதம், ராமசாமி, இளையபெருமாள், பேரூர் பொருளாளர் தெய்வேந்திரன், ; வார்டு கவுன்சிலர்கள் இசக்கிமுத்து, ஜெயசித்ரா, இசக்கி, கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோமு, பாலசுப்பிரமணியன், மாரிச்செல்வம், மாடசாமி, மாரியப்பன், கோ.சுடர்ராஜ், குத்தாலிங்கம், ராமகிருஷ்ணன், இரா.சுடர்ராஜ், ராமசாமி, சீனிப்பாண்டி, காலசாமி, பாரதிராஜா, பழனிச்சாமி, சாமிராஜ், பூங்குன்றன், மாயாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *