துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாரத்தில் பிளஸ் டூ பொது தேர்வில் (மார்ச் -2024) துறையூர் சௌடாம்பிகா மெட்ரிக் பள்ளி மாணவர் நா.கரம் சந்த் 600 க்கு 592 மதிப்பெண்கள் பெற்று துறையூர் வட்டார அளவில் முதலிடம் பெற்று சாதனை.

பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.அந்தத் தேர்வுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் (மே-06) வெளியானது.அதில்
துறையூர் வட்டார அளவில் துறையூர் சௌடாம்பிகா மெட்ரிக் பள்ளி மாணவர் நா.கரம் சந்த் 600-க்கு 592 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழ் பாடத்தில் -99 , ஆங்கிலம் -97, இயற்பியல் -98, வேதியியல் -98, கம்ப்யூட்டர் சயின்ஸ் -100, கணிதம் -100 மதிப்பெண்கள் பெற்று துறையூர் வட்டார அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து சௌடாம்பிகா பள்ளி குழுமத்தின் தாளாளர் டாக்டர் எஸ்.ராமமூர்த்தி மற்றும் செயலாளர் ஆர்.செந்தூர்செல்வன் ஆகியோர் மாணவர் நா.கரம் சந்த் -க்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.இதனைத்தொடர்ந்து பள்ளி முதன்மை முதல்வர் ராமசாமி, பள்ளி முதல்வர் நல்லசிவம் மற்றும் மாணவரின் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமான பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.மாணவரின் பெற்றோர் வெ.நாகராஜீ (தின ஓசை நாளிதழின் திருச்சி மாவட்ட செய்தியாளர்) அம்மா தமிழ்மணி ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *