கம்பம் நகராட்சி ஆணையருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் கம்பம் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் சித்திரை திருவிழா கடந்த 21 நாட்களாக வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த விழாவில் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் கோவில் வளாகத்தில் சிறப்பு பணியாளர்களை நியமித்து குப்பைகளை அகற்றி சிறப்பாக செயல்பட்ட கம்பம் நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து அதன் ஆணையாளர் வாசுதேவனுக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து சிறப்பு மரியாதை செய்தனர்